fbpx
Homeபிற செய்திகள்வேலூர் மேயர், துணை மேயர் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு

வேலூர் மேயர், துணை மேயர் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு

வேலூர் மாநகராட்சியின் மேயராக சுஜாதாவும் துணை மேயராக சுனில் குமாரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்

பின்னர் மாலையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு இருவரையும் வாழ்த்தி பேசினார்

அப்போது திமுக சார்பில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந் தாலும் கட்சி பாகுபாடின்றி நீங்கள் பணியாற்ற வேண்டும் மக்களின் அடிப்படை வசதிகளான சாலையை மேம்படுத்த வேண்டும் கட்சிக்கு அவப்பெயரில்லாமல் செயல்பட வேண்டும் என்றார்

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது நகர்புற உள்ளாட்சி மறைமுக தேர்தல் ஓரளவு சுமுகமாக முடிந்தது பெரும்பான்மையான இடங்களில் திமுக வென்றுள்ளது சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றும் போட்டிகள் இருந்தது முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு அடாவடி செய்கிறது

கேரள அரசிடம் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு உதவும் என்று நம்புகிறோம் என்று கூறினார்

அப்போது வேலூர் கமிஷனர் அசோக்குமார் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்

படிக்க வேண்டும்

spot_img