fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி- மஹிந்திரா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி- மஹிந்திரா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகி ருஷ்ணா பொறியியல் கல் லூரி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர்.அல மேலு வரவேற்றார்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்கா வலர் டி.லட்சுமி நாராயண சுவாமி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமி டெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் சங் கர் வேணுகோபால் ஆகி« யார் இதில் கையொப்பமிட்டனர்.

இக்கல்லூரியின், சிறப்பு பாடத் திட்டங்களில் வளர்ந்து வரும் களங்களான சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, டேட்டாசயின்ஸ், ஆக்கு மெண்டெட் மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டி, ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன், சென்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்சார வாகனம் ஆகியவற்றை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையின் உதவி கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கல்லூரி மாணவர்கள் இன்டர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு பெறவும், எலக்ட்ரிக் வாகனம், இண்டஸ்ட்ரி இம்மெர் சன் திட்டங்கள் மற்றும் ஆலோசனைப் பணிகளின் களத்தில் சிறந்து விளங்கும் மையத்தை உருவாக்க இந்த ஒப்பந்தம் பயன்பெறும்.

அதன்மூலம் மேற்கூறிய களங்களில் சிறப்பு சான்றி தழ்கள் மாணவர்கள் பெற உறுதுணையாக இருக்கும்.

கல்லூரியின் இண்ட ஸ்ட்ரி கனெக்ட் ஆலோசகர் எம்.கணேஷ், மின்னணு மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் முனைவர் கதிர்வேல் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img