நிறுவனச் செயலா ளர் தேர்வில், ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாண வர்கள் அகில இந்திய அளவில் சாதனைப் படைத்துள்ளனர்.
இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம் (ஐ.சி.எஸ்.ஐ.), கம்பெனி செக்ரட்டரி எக்ஸிகியூட்டிவ் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இதன் படி கடந்த 2021-ம் ஆண்டு இத்தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. அதன் முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
அதில் கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பி.காம். சி.எஸ். மூன்றாமாண்டு மாணவர் ஜி.ஏ. கார்த்தி தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் நான்காமிடம் பிடித்துள்ளார்.
அதே துறையைச் சேர்ந்த மாணவர்கள் கே.பாலகிருஷ்ணன், எஸ்.ஸ்ரீஹரி ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கம்பெனி செக்ரட்டரி எக்ஸிகியூட்டிவ் தேர்வில் சாதனை படைத்த மாண வர்களை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார்பாராட்டி வாழ்த்தினார்.
பி.காம். சி.எஸ். துறைத்தலைவர் முனைவர் டி.சந்தானகிருஷ்ணன், உதவிப் பேராசிரியை எம்.சத்தியபிரியா ஆகியோர் உடனிருந்தனர்.