fbpx
Homeபிற செய்திகள்வெளிமாநில பதிவு எண்ணுடன் ஊட்டியில் இருந்து இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

வெளிமாநில பதிவு எண்ணுடன் ஊட்டியில் இருந்து இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

ஊட்டியில் இருந்து இயக்கப்பட்ட 2 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டுவரும் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களால் தமிழக போக்குவரத்து துறைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுவதாக கூறி, இந்த பஸ்களை, தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகளாக மாற்ற வேண்டும் என ஏற்கெனவே தமிழக போக்குவரத்து துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. அந்த கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது.
தமிழக முழுவதும் இதில் சுமார் 100 பஸ்கள் மட்டுமே பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் பதிவு செய்யவில்லை.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் சுற்றுலா விதிகளை மீறி இயங்கும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் இருந்து சென்னை பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட்ட நாகாலாந்து மாநிலம் உள்ளிட்ட பிற மாநில பதிவு எண் இரண்டு பஸ்களை பறிமுதல் செய்து ஆர்டிஓ தியாகராஜன் நடவடிக்கை எடுத்தார். மேலும் 3 பஸ்களுக்கு தலா ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசு உத்தரவுப்படி பஸ்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. முதலில் நாகலாந்து, அரியானா பதிவு எண் கொண்ட பஸ்கள் பறிமுதல் செய்யப்படும். நாளை (இன்று) முதல் பாண்டிச்சேரி கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட பஸ்களும் பறிமுதல் செய்யப்படும் என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img