fbpx
Homeபிற செய்திகள்2,20,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வேலூர் நறுவீ மருத்துவமனை சாதனை

2,20,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வேலூர் நறுவீ மருத்துவமனை சாதனை

வேலூர் நறுவீ மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் என 2,20,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாக நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் தெரிவித்தார்.

இன்று நறுவீ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தாதவது: வேலூரில் நறுவீ மருத்துவமனை என்ற பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டு ஆகிறது.

இந்த கால கட்டத்தில் அம்மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இம்மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு இருதய சிகிச்சை, நுரையீரல், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, குடல் நோய் சிகிச்சை, மூட்டு வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணம டைந்துள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டில் 2,20,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் உலகை அச்சுறுத்திய ஆட்கொல்லி நோயான கொரோனாவிற்கு இம்மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு இந்த நோயால் பாதிக்கப்பட்ட 3,543 நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அளித்து நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், இம்மருத்துவமனைக்கு மகப்பேறு சிகிச்சைக்காக வந்த 602 கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தைபேறு அடைந்துள்ளனர்.

இருதய நோயால் பாதிக்கப்பட்ட 1,113 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மற்றும் ஆன்ஜியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்து மற்றும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட 4,735 நோயாளிகளுக்கு இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டனர்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 2,716 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜி.வி.சம்பத் தெரிவித்தார்.

அப்போது மருத்துவமனை துணை தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், இயக்குநர் டாக்டர் திலிப் மத்தாய், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நித்தின் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img