fbpx
Homeபிற செய்திகள்கண் பரிசோதனை முகாமில் இலவச அறுவை சிகிச்சைக்கு 296 பேர் தேர்வு

கண் பரிசோதனை முகாமில் இலவச அறுவை சிகிச்சைக்கு 296 பேர் தேர்வு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம், தஞ்சைமாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் ஆகிய இணைந்து நடத்தும் ஆர்ய வைசிய சமாஜம் ,ஸ்ரீ வாசவி பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் ஆகியோர் நிதி உதவியுடன் நடை பெற்ற இலவச கண் சிகிச்சை சரஸ்வதி பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமை சங்கத் தலைவர் லயன் பொறியாளர் டி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். வட்டார தலைவர் லயன் எஸ்..மோகன் , முன்னாள் தலைவர்கள் லயன் கே வி ஆர் வெங்கட்ராமன், டி..சம்பத், ஜி.பிரிதிவிராஜன் கே ஆர். மனோகரன்,எல் ஐ சி கே ஆர் .அசோகன், ஆர்.முரளி தாஸ் மற்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தார்கள். அரசு மகளிர் கல்லூரி லியோ சங்கத்தின் தலைவர் அபர்ணா, செயலா ளர் ராஜஜேஸ்வரி, பொருளாளர் பத்மாவதி, மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை பணியை செய் தார்கள்.

அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று பொது மக்களுக்கு கண்களை பரி சோதித்தனர். நகரப்புற கிராமப்புற பொது மக்கள் சேர்ந்த சேர்ந்த 484 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 296 பேர் கண் புரை கண்டறியப்பட்ட நோயாளிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்ளுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய் யப்பட்டன.
முகாமிற்கான ஏற்பாடுகளை செயலாளர் பொறியாளர் எஸ்.ஆர்.முரளி, பொருளாளர் வி செல்வமணி ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img