fbpx
Homeபிற செய்திகள்3வது அலை தொற்று தடுக்க பிரமர் மோடி அதிரடி நடவடிக்கை: போர்க்கால வேகத்தில் கொரோனா தடுப்பூசி

3வது அலை தொற்று தடுக்க பிரமர் மோடி அதிரடி நடவடிக்கை: போர்க்கால வேகத்தில் கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா வைரஸின் 3-வது அலையைத் தடுக்க தடுப்பூசித் திட் டத்தை போர்க்கால வேகத்தில் செயல்படுத்த வேண் டும் என்று மத்திய அமைச்சர் களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ் 2-வது அலை நாட்டில் மெல்லக் குறைந்து வருகிறது, கொரோனாவில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பைக் குறைக்கும் வகையில் தடுப் பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

ஆனாலும், இந்த வேகம் போதுமானதாக இல்லை, அதிகமான மக்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த வேகத்தில் தடுப்பூசித் திட்டம் சென்றால் கொரோனா 3-வது அலை வருவதற்கும் வாய்ப்புள்ளது என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசித் திட்டம், 3-வது அலை யைத் தடுப்பது உள் ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் ஏறக்குறைய 4 மணிநேரம் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் நிதிஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய தாவது: தற்போது நாட்டில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்படுவதும், இருப்பு வைத்திருப்பதும் போதுமானதாக இல்லை.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது.

அந்த அச்சம் குறையவில்லை. ஒவ்வொரு அமைச்சரும் தங்களுக்கு உட்பட்ட தொகுதியில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும். போர்க் காலஅடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணியைச்செய்ய வேண்டும்.

மூன்றாவது அலை யைத்தடுக்கத்தேவை யான அனைத்து நடவடிக்கை களையும் எடுக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை எவ்வாறு சிறந்த முறையில்கொண்டு செல்வது குறித்து மக்க ளிடம் கருத்துக்களைப் பெற வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்கு கொண்டு வரும் காலத்தில் மிக அதிகமான தொலைவில் நாம் இருக்கிறோம் என்பதை அமைச்சர்கள் நினைவில் கொண்டு, 3-வது அலை யைத் தடுக்க முயற் சிகளை எடுக்க வேண்டும்.

தங்கள் துறையில் கிடப்பில் உள்ள, முடிக்காத திட்டங்களை விரைவில் முடிக்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img