fbpx
Homeபிற செய்திகள்கரூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3வது புத்தகத் திருவிழா

கரூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3வது புத்தகத் திருவிழா

கரூர் பிரேம் மஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம், பபாசியுடன் இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு புத்தகத்திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல், மாநகராட்சி மேயர் வெ.கவிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி) மற்றும் சிவகாம சுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகி யோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத் துத்தரப்பினரிடமும் வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்து அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் வகையில், புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடும் மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட் டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், கடந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள். புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பின ரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதேபோன்று இந்த ஆண்டு கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 3-வது கரூர் புத்தகத் திருவிழா-2024 நேற்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 11 நாட்கள் கரூர், பிரேம் மஹாலில் நடைபெறவுள்ளது. இப்புத்தகக் கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறவும். கலை மற்றும் இலக்கியம் நிகழ்ச்சிகள் நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்புத்தகக் கண்காட்சியில் கரூர் மாவட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும், மாண வர்களுக்கு பயன்படும் மின்நூல் மற்றும் மின்பொருண்மை பதிப்பாளர்களின் படைப்பு களைக் கொண்ட விற்பனையகங் கள் அமைத்திடவும், அரிய வகை புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட வுள்ளன. மேலும், அரசுத் துறைகளின் திட்டங்கள் குறித்த அரங்கங்கள், வாசிப்பு அரங்கங்கள் மற்றும் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி வாசிப்பு அரங்கம், ஒளி, ஒலி அமைப்புடன் கூடிய அரங்கங்கள் இடம் பெறவுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நூல் விற்பனையகங்கள் அனைத்தும் புத்தகக் கண்காட் சிக்கு வருபவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அதன் கருப்பொருள் அடிப்படை யில் வரிசைப்படுத்தி அமையும் வகையில் அரங்குகள் அமைத்திட வும், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இப்புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் இலக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் அரங்குகளில் கரூர் மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி அப்படைப்புகள் சார்ந்த உரையாடல் நடைபெறும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கரூரில் நடைபெறவுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
கடந்த ஆண்டு நடந்த புத்தகத் திருவிழாவில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு அதை விட விற்பனை அதிகரிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இன்றைய முதல் நாள் நிகழ்ச் சியில் முன்னாள் தலைமைச் செய லாளர் முனைவர்.வெ.இறையன்பு “வாசிக்க… வாசிக்க…” தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் ம.கண்ணன். விமல் ராஜ்(நில மெடுப்பு). குளித்தலை சார் ஆட்சி யர் ஸ்வாதி, கரூர் வருவாய் கோட் டாட்சியர் முகமது பைசல், துணை மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையர் சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img