கோவை மாநராட்சி அலுவலகத்தில், நடந்த விழாவில், கோவை மாநகரில் கொரோனா நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் மாநகராட்சிக்கு வழங்கியது. இவ்விழாவில், குமாரவேல் பாண்டியன் (ஆணையாளர்,) மருத்துவர் ராஜா, நிர்வாக பொது மேலாளர் தேவன், சேகர் (பி.ஆர்.ஓ) உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.