fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா தொற்று

கோவையில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா தொற்று

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள வீதியில் சுமார் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வீதியே சீல் வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இருந்தபோதும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கோவையில் மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

கோவையில் கொரோனா பாதிப்பு 22 சதவிகிதம் குறைந்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து வீதிவீதியாக சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மேற்கு புதூர் பகுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 658 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் சுமார் 50 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வீதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img