fbpx
Homeபிற செய்திகள்கொடிசியா வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி ஆட்சியர் சமீரன் ஆய்வு

கொடிசியா வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி ஆட்சியர் சமீரன் ஆய்வு

சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவை கொடிசியா வளாகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை சார்பில் நேற்று சிறப்பு யோகா வகுப்பு நடத்தப்பட்டது.

இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: ஊரடங்கு தளர்வு குறித்த தமிழக அரசின் அறிக்கையில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் பிரிவில் கோவை மாவட்டம் உள்ளது.
முதல் பிரிவில் உள்ள கொரோனா தொற்று அதிகம் பாதித்த 11 மாவட்டங்களுக்கு மேலும் ஒரு வார காலத்துக்கு புதிய தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ளது போன்றே மேலும் ஒரு வாரத்துக்கு கோவை மாவட்டத்தில் தளர்வுகளின்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும். பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் சமீரன் கேட்டுக்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img