fbpx
Homeபிற செய்திகள்சிவகாசியில் அகில இந்திய ஓபன் டென்னிகாய்ட் போட்டித் தொடர்

சிவகாசியில் அகில இந்திய ஓபன் டென்னிகாய்ட் போட்டித் தொடர்

இதயம் அகில இந்திய ஓபன் டென்னிகாய்ட் போட்டித் தொடரின் இரண்டாவது பதிப்பு சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கலில், ஹட்சன் டென்னிகாய்ட் அகாடமி யில் 3 நாட்கள் நடந்தன.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 320 விளையாட்டு வீரர்கள் போட்டித் தொடரில் பங் கேற்றனர்.

இப்போட்டித் தொடருக்கான மொத்த பரிசுத் தொகை நான்கு இலட்சம். திறமையை ஊக்குவிக்கவும், டென்னிக்காய்ட் விளை யாட்டில் தொடர்ந்து ஆர்வத்தை அதிகரிக்கவும், ஒவ்வொரு பிரிவிலும் முதல் எட்டு இடங்களைப் பெறுபவர்களுக்கு போட் டிப்பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் வி.வி.வி.அண்ட் சன்ஸ் எடிபிள் ஆயில்ஸ் லிமிடெட் சேர்மன் இதயம் முத்து தலைமை வகித்து வீரர்களுக்கு, பரிசுகளையும் பதக் கத்தையும் வழங்கி பாராட்டினார்.

ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் தலைவர் சந்திரமோகன் கூறியதாவது: அகில இந்திய அளவில் டென்னி காய்ட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறனை சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு இதயம் அகில இந்திய ஓபன் டென்னிகாய்ட் போட்டித் தொடரின் இரண்டாவது பதிப்பு சிறப்பான களமாக விளங்கியது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த வீரர்கள், தங்களது மன உறுதியையும் விளையாட்டுத் திறனையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தினர்.

டென்னிகாய்ட் விளையாட்டில் அதிக எண்ணிக்கையிலான வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து, டென்னிகாய்ட்டை மேலும் பிரபலமாவதற்கு தொடர்ந்து முயற்சிப்போம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img