தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் பட டப்படிப்புகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான நேரடி கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (பிப்.23) நடைபெற்றது.
இது குறித்து முதன்மையர் (வேளாண்மை) மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் மா. கல்யா ணசுந்தரம் தெரிவித்ததாவது:
இதில் முன்னாள் இராணுவத் தினரின் வாரிசுகளுக்கான கலந் தாய்வில், டி. சசி, எஸ்.ஆர். ஆர்த்தி, ஜே. சுப்ரியா ஆகியோர் முதல் மூன்று இடத்தைப் பிடித்தனர்.
சி. சந்தோஷ், எம். லிங்கேஸ்வரன், ஆர். யோகராஜ் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களையும், கே.ஷிவானி, ஜே. முஹம்மது சாத், எஸ். சிந்தியா ஆகியோர் விளையாட்டு வீரர்க ளுக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களையும் பெற்றனர்.
இவர்களுக்கு மாணவர் சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்தாய்வில் பங்குபெற்றவர்களை வாழ்த்தினர்.