அகில இந்திய தடகளப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்று, மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தார் கோவை மாணவி.
ஒடிசாவின் புவனேஷ்வரில் அகில இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
இதில் பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில், கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி எஸ்.நந்தினி பங்கேற்றார். இவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
8 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் தங்கம் வெல்லும் வாய்ப்பை அவர் தவறவிட்டார் என்று தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழகத்திற்கும் கோவை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த மாணவி எஸ்.நந்தினிக்கு, கல்லூரி தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி, செயலாளர் டாக்டர் என்.யசோதாதேவி, முதல்வர் டாக்டர் எஸ்.நிர்மலா, உடற்கல்வி இயக்குனர் டாக்டர் எம்.ஜெயசித்ரா உள்ளிட்டோர் பாராட்டினர்.