fbpx
Homeபிற செய்திகள்இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ‘பேட்ரியாட்டிக் ரன்’

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ‘பேட்ரியாட்டிக் ரன்’

கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூரும் வகையில், என்.சி.சி. அமைப்பின் சார்பில் ‘பேட்ரியாட்டிக் ரன் 2022’ எனும் ஓட்டம் நடத்தப்பட்டது.

ஓட்டத்தை கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயா, முதன்மை செயல் அதிகாரி முனைவர் கருணாகரன் ஆகி யோர் துவக்கி வைத்தனர்.

இதில் கல்லூரியின் என்.சி.சி. மாணவர்கள் மற்றும் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மாணவர்கள் அனைவரும் மூவர்ணக்கொடியை பிரிதிபலிக்கும் வண் ணம் கொடி போல் நின்று சுதந்திரப் போ ராட்ட வீரர்களை நினைவு கூர்ந்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி என்.சி.சி. அலுவலர்கள் லெப்டினன்ட் ரவிக் குமார், பிளையிங் ஆபீசர் ஜெய்னுலாப்தீன் ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img