fbpx
Homeபிற செய்திகள்புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாந்தோம் சமூக சேவை நிறுவனம் மற்றும் காரிதாஸ் இந்தியா இணைந்து சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினத்தை கருத்தில் கொண்டு செயின்ட். ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புற்றுநோயை கண்டறியும் முறைகளைப் பற்றிய விரிவான விழிப்புணர்வு மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை சிவில் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஏ.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்தார்.

சாந்தோம் சமூக சேவை நிறுவனத்தின் செயலாளர் அருட் தந்தை ஜியோ குன்னதுபறம்பில், உதவி இயக்குனர் அருட்தந்தை அகஸ்டின் செரியன்காந்தத் மற்றும் செயின்ட்.

ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அருட்தந்தை பிஜோ பாலாயில், துணை முதல்வர் கே. சங்குப்ரியா முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச் சியில் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img