fbpx
Homeபிற செய்திகள்“ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்பு” திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் இலக்கு: 3292 இதுவரை...

“ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்பு” திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் இலக்கு: 3292 இதுவரை நிறைவேறியது 1247 மார்ச் 31-க்குள் அனைவருக்கும் இணைப்பு

விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும்” திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம், ஈரோடு மின்பகிர்மான வட்டத்தில் 1187 எண்ணிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 467 எண்ணிக்கையிலும், கோபிசெட்டிபாளையம் மின்பகிர்மான வட்டத்தில் 2105 எண்ணிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 780 எண்ணிக்கையிலும், விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள விவசாயிகளுக்கு 31.03.2022-க்குள் மின் இணைப்பு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த ஆண்டில் விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், முதல் கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக புதிய மின் இணைப்புகள் வழங்கும் ஆணையை முதல்வர் வழங்கினார்.

மாதத்திற்கு 25 ஆயிரம் இணைப்புகள்
அதன்படி மாதத்திற்கு 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கி 4 மாதத்திற்குள்ளேயே திட்டத்தை முடிக்க மின்சாரத்துறை திட்டமிட்டிருக்கிறது.

இந்த திட்டத்தின்கீழ் 4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்த நிலையில் முதல்கட்டமாக 1 லட்சம் பேருக்கு இணைப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது.

அரசின் விவசாய மின் இணைப்பு திட்டத்தினை பொறுத்தவரை, சாதாரண பிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. சுயநிதிப் பிரிவில் மின் இணைப்பு பெற ரூ.10,000/-, ரூ.25,000/-, ரூ.50,000/- என 3 வகைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுயநிதிப் பிரிவில் கட்டணம் செலுத்தி பதிவு செய்த பிறகும் மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்குவதற்காக 2018-ல் தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில், 5 குதிரை திறன் உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 இலட்சம், 7.50 குதிரை திறனுக்கு ரூ.2.75 இலட்சம், 10 குதிரை திறனுக்கு ரூ.3 இலட்சம், 15 குதிரை திறனுக்கு ரூ.4 இலட்சம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

2 பகிர்மான வட்டம்
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் ஆகிய 2 மின்பகிர்மான வட்டங்கள் உள்ளன.

அந்த வகையில், ஈரோடு மாவட்ட த்தில் விவசாய மின் இணைப்பு வழங்கு வதை துரிதப்படுத்த ஈரோடு மின் பகிர்மான வட்டம் நகரியம், தெற்கு, பெருந்துறை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய விண்ணப்பதாரர்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உட்பட்டு பெயர் மற்றும் சர்வே எண் உட்பிரிவு மாற்றம், மற்றும் சர்வே எண், கிணறு மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம், ஈரோடு மின்பகிர்மான வட்டத்தில் 1187 எண்ணிக்கையில் இலக்கு நிர்ணயிக்க ப்பட்டு, 467 எண்ணிக்கையிலும், கோபி செட்டிபாளையம் மின்பகிர்மான வட்டத்தில் 2105 எண்ணிக்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 780 எண்ணிக் கையிலும், விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு 31.03.2022-க்குள் மின் இணைப்பு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வாழ்வாதாரம் மேம்பட்டது
ஈரோடு மாவட்டம், ஈரோடு மின்பகிர்மான வட்டம், பெருந்துறை பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.சுப்ரமணியம், த/பெ.சென்னிமலை என்பவர் தெரிவித்ததாவது:
(மின் இணைப்பு எண்:056 007 910, நாள்:28.12.2021)

நான் 2.50 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். நான் முதல்வர் அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பெருந்துறை மின்பகிர்மான வட்டத்தில், வைப்புத்தொகையாக ரூ.2.75 இலட்சம் செலுத்தி தட்கல் முறையில் விண்ணப்பித்து இருந்தேன்.

நான் விண்ணப்பித்த குறுகிய காலத்திலேயே, எனக்கு அளவீட்டு கருவியுடன் 7.5 குதிரைத் திறன் அளவில் இணைப்பு வழங்கப்பட்டது. நான் தற்போது நெற்பயிர் மற்றும் சோளம் பயிரிட்டுள்ளேன்.

எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில், விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

7 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவு
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மின்பகிர்மான வட்டம், தெற்கு சித்தோடு பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.தெய்வசிகாமணி, த/பெ.செல்லப்பகவுண்டர் என்பவர் தெரிவித்ததாவது:

(மின் இணைப்பு எண்:016 003 221, நாள்:08.12.2021) நான் 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். சிறு வயது முதலே விவசாயம் தான் செய்து வருகிறேன். எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தற்போது நிலத்தில் நெல் மற்றும் சோளம் பயிரிட்டுள்ளேன். நான் விவசாய மின் இணைப்பு கோரி கடந்த 7 வருடங்களுக்கு முன் வைப்புத்தொகையாக ரூ.500/- செலுத்தி விண்ணப் பித்திருந்தேன்.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற வுடன், ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் இத்திட்டம் அறிவித்த, 15 நாட்களுக்குள், எனக்கு 5 குதிரைத் திறன் அளவில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இணைப்பு வழங்கிய பின் ரூ.24,500/- தொகையை செலுத்தி உள்ளேன். இத்தி ட்டம் எனக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தினை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

30 நாட்களில் வந்தது மின்சாரம்
ஈரோடு மாவட்டம், ஈரோடு மின்பகிர்மான வட்டம், முள்ளாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், த/பெ.ரத்னசாமி என்பவர் தெரிவித்ததாவது:
(மின் இணைப்பு எண்:027 005 3427 நாள்:10.01.2022)

நான் 4 ஏக்கர் நிலத்தில் விவசாய தொழில் செய்து வருகிறேன். எனக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். முதல்வர் அறிவித்துள்ள விவசாயிகளுக்கு “ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்பு” வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறேன்.

இத்திட்டம் குறித்து எனது நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன். நான் ஈரோடு மேற்கு மின்பகிர்மான வட்டத்தில், வைப்புத்தொகையாக ரூ.2.50 இலட்சம் செலுத்தி தட்கல் முறையில் விண்ணப்பித்து இருந்தேன்.

இத்திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனது வீட்டிற்கு அருகிலேயே மின் இணைப்பு கம்பம் இருந்ததால், விண்ணப்பித்த ஒருமாத காலத்திற்குள், எனக்கு அளவீட்டு கருவியுடன் 5 குதிரைத் திறன் அளவில் இணைப்பு வழங்கப்பட்டது.

நான் தற்போது, தென்னை, சோளம், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் பயிரிட்டுள்ளேன். விவசாய மின் இணைப்பு பெறுவது சிரமமான சூழ்நிலை இருந்து வந்தநேரத்தில், முதல்வர் அறிவித்த ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், மிக விரைவில் பயன்பெற்றுள்ளேன்.

விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வரும் முதல்வருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு
க.செந்தில்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
ஈரோடு மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img