fbpx
Homeபிற செய்திகள்கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு இரங்கல்

கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு இரங்கல்

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் கொரோனாவால் உயிரிழந்த 66 வழக்கறிஞர்களுக்கு கோவை பார் அசோசியேஷன் சார்பில் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று (3-ந்தேதி) நடைபெற்றது.

கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அருள்மொழி தலை மையில் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் கலையரசன், பொருளாளர் ரவிச்சந்திரன், தமிழக அரசின் விருது பெற்ற மூத்த வழக்கறிஞர் ஏ.பி.ஜெயசந்திரன், அரசு வழக்கறிஞர் அருள்குமார் மற்றும் பேரவை நிறுவன தலைவர் வழக்கறிஞர் புஷ்பானந்தம், அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் செல்வகுமார், சுரேஷ்குமார், மாணிக்கராஜ், தி.மு.க. வழக்கறிஞர் கணேசன்உள்பட ஏராளமானோர் கலந் துகொண்டனர்.

அதை தொடர்ந்து பார் அசோசியேசன் அரங்கில் இரங்கல் கூட்டம் தலைவர் பி.ஏ.அருள்மொழி தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img