fbpx
Homeபிற செய்திகள்சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்துமாறு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை

சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்துமாறு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை

சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோ ரியும், ஊதிய உயர்வு கோரியும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 150 பேர் பணியாற்றி வருகிறோம்.

எங்களது ஊதியம் தனிப்பட்ட வங்கிக் கணக் கில் செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது ஏ.எல்.எஃப் என்ற குழு மூலமாக அனுப்பபடுகிறது.

இதில் எங்கள் ஊதியத்தை எடுப் பது சிரமமாக உள்ளது.
எனவே ஊதியத்தை வங் கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

மேலும், எங்க ளுக்கு ரூ.4500 மட்டுமே ஊதியம் கிடைக்கிறது.

எங்கள் ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும்.இவ்வாறு மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img