fbpx
Homeபிற செய்திகள்ஈஷா பொறியியல் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்

ஈஷா பொறியியல் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்

கோவை, பாலக்காடு சாலை, நவக்க ரையில் அமைந்துள்ள ஈஷா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது

விழாவுக்கு, தலைமை விருந்தினர் கல்லூரி தலைவர் டி.டி.ஈஸ்வரமூர்த்தி, தலைமை வகித்தார்.

கல்லூரிச் செயலாளர் டி.இ. சுஜாதா விழாவை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, த்ரோ பால் போட்டி கலை நிகழ்ச்சி, ஓவியம், மெஹந்தி பேச்சுப் போட்டி, ஃபன்கேம்ஸ் நடைபெற்றன.

போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதன்மை செயல் அதிகாரி டி. இ.அஜித், தலைமை நடவடிக்கை அதிகாரி ஆதர்ஷ் கல்லூரி நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த், முதல்வர் டாக்டர் சுனிலா ஜார்ஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்

இதில், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img