fbpx
Homeபிற செய்திகள்மார்ட்டின் பவுண்டேஷன் 22வது ஆண்டு விழா

மார்ட்டின் பவுண்டேஷன் 22வது ஆண்டு விழா

கோவை, பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் அரங்கில், மார்ட்டின் பவுண்டேஷன் 22-வது ஆண்டு விழா மற்றும் உலக மகளிர் தின விழா நடந்தது.

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, ஆட்டோ ஓட்டுனர்கள், வழக் கறிஞர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு சாதனை யாளருக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினர் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தனர்.

ரோட்டரி கிளப் ஆக்ருதியை சார்ந்த குமார், மார்ட்டின் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் லீமா ரோஸ் மார்ட்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாதனை படைத்த 4 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
ஏழை மாணவிகளுக்கு 2 லட்சம், மதிப்பில் கல்வி கட்டணம் வழங்கப்பட்டது.

கோவையில் பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் 30 பேருக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img