விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு ஊராட்சி நர்சரி அருகில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி) திலகவதி ஆகியோர் உள்ளனர்.