fbpx
Homeபிற செய்திகள்நேரு கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா

நேரு கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா

கோவை, திருமலையம்பாளையம் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நேரு பெண்கள் பாதுகாப்பு அமைப்பு மையத்தின் சார்பில், சர்வதேச மகளிர் தின விழா, கல்லூரி கருத்தரங்கில் கொண்டாடப்பட்டது.

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பா.அனிருதன் வர வேற்றார்.வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 26 பெண்மணிகளை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.

நேரு கல்வி குழும நிர்வாகி மற்றும் கல்விச் செயலர் முதன்மை கல்வி அதிகாரி பி.கே கிருஷ்ணகுமார், பெண்கள் சக்தியின் அடையாளம், ஆக்கத்தின் வாழ்விடம், வீரத்தின் விளைநிலம், விவேகத்தின் உறைவிடம் அத்தகைய பெண்களை வாழ்த்துகிறேன், என்றார்.

நேரு சர்வதேச பள்ளி தாளாளர் முனைவர் சைதன்யா கிருஷ்ணகுமார், மனம் தளராது உழைக்கும் மங்கைகள் மண்ணில் படைக்கப்பட்ட மாமணிகள் மாபெரும் சாதனைகளை மேலும் படைத்திட மனதார வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

விருது பெற்றவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நேரு மகளிர் சிறப்பு மையத்தின் இயக் குனர் முனைவர் எம்.கனகரத்தினம் நன்றி கூறினார்,

படிக்க வேண்டும்

spot_img