fbpx
Homeபிற செய்திகள்எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறங்காவலருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறங்காவலருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக் கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமிக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

ரோட்டரி கிளப் ஆஃப் காட்டன் சிட்டி சார்பில், விருது வழங்கும் விழா, கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகி ருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்ரீ வேலு மணியம்மாள் நினைவு அரங்கில் நடைபெற்றது.

ரோட்டரி கிளப் ஆஃப் காட்டன் சிட்டி தலைவர் அஜய் குமார் குப்தா தலைமை வகித்து பேசினார். கோபால் சர்மா விருதாளரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

சிறப்பு விருந்தினராக போஸ்ட் ரோட்டரி கவர்னர் மற்றும் மாவட்டப் பயிற்றுநர் ஏ.வி. பதி கலந்து கொண்டு கல்வி, மருத்துவம், விளையாட்டு, கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு உதவியது மூலமாக சமூகத்திற்கு செய்து வரும் சேவைக்காகவும், சைமா அமைப்பின் முன்னாள் தலை வராக செயல்பட்ட தொழில் துறைக்கும் பங்காற்றியமைக் காவும், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி அவர்க ளைப் பாராட்டி, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவித்தார். டி.லட்சுமி நாராயணசுவாமி ஏற்புரை வழங் கினார்.

உதவி கவர்னர் கே.கே.சங்க், அருள்சாமி, மாவட்டத் தலைவர்-தொழிற்பிரிவு முத்து ராமன், பிரசன்னா கோத்தாரி, குமார்பால் கே.தா கா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img