fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்-மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்

திருப்பூரில் மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்-மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்

திருப்பூர் மாநகராட்சி, ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம் அரு கில் டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா, ஜேசிஐ திருப்பூர் மெட்ரோ, துளிர் அறக்கட்டளை, திருப்பூர் தொழில் அறக்கட்டளை, மற்றும் விதைகள் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி, முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 கி.மீ. தூரம் மாரத்தான் ஓட்டம் நடந்தது.

இதனை திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை யில் மேயர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து நடை பெற்ற மாரத்தான் ஓட்டத்தில் மேயர் தினேஷ்குமார் அனைத்து போட்டியாளர்களுடன் வீரபாண்டி பிரிவு வரை கலந்துகொண்டு விழிப் புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நுரையீரல் , புற்றுநோய் பரிசோதனைகள் நடை பெற்றது.

இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img