fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு சங் கத்தின் மாநில தலைவர் எஸ்.பி.பழனிவேலு தலை மையில் சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.

மாநில துணைத்தலைவர் சுரேஷ்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ரவி, விருதுநகர் மாவட்ட இணைச்செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கோவை மாவட்ட சங்கத் தலைவராக டே னியல் விஜயகுமார், செயலாளராக ஞா.ஆல் பர்ட் அலெக்சாண்டர், பொருளாளராக பன்னீர், துணைத்தலைவர்களாக அருளானந்தம், ராஜன், இணைச்செயலாளர்களாக ஜேம்ஸ் கென்னடி, ஜோஸ் வா, சஙகர்கணேஷ் ஆகியோரும் மகளி ரணி தலைவியாக அக்சீலியா இமாகுலேட் தீபா, மக ளிரணி ஒருங்கிணைப் பாளராக எஸ்.கீதா, மக ளிரணி செயலாளராக பிரியதர்ஷினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ராம்குமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளை தேர் தல் முறைப்படி தேர்வு செய்தார்கள்.

கூட்டத்தில் தமிழகத்தை சிறப்பாக வழிநடத்தி கொண்டு இருக்கும் முதல் வர் ஸ்டாலினுக்கும் கல் வித் துறையை சிறப்பாக வழிநடத்தி வரும் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து கடிதம் அனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள் அனைவரும் முதன்மை கல்வி அலுவலரையும், மாவட்ட கல்வி அதி காரிகளையும் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண் டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது என செய லாளர் ஞா.ஆல்பர்ட் அலெக்சாண்டர் தெரி வித்தார்.

படிக்க வேண்டும்

spot_img