fbpx
Homeபிற செய்திகள்பார்கின்சன் பாதிப்பு நோயாளிகளுக்கு அபோமார்ஃபின் பம்ப்புகள் அறிமுகம்

பார்கின்சன் பாதிப்பு நோயாளிகளுக்கு அபோமார்ஃபின் பம்ப்புகள் அறிமுகம்

சென்னையில் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் முதிர்ச்சியடைந்த பார்கின்சன் நோய் மீது நடத்தப்பட்ட கல்விசார் கருத்தரங்கில் பங்கேற்ற இத்துறையைச் சார்ந்த உலகின் முதன்மை நிபுணர்கள், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையிலுள்ள அமைவிடமாக இந்தியா உருவாகி வருகிறது என்று குறிப்பிட்டனர்.

ஏறக்குறைய 580,000 பார்கின்சன் நோயாளிகள் இந்நாட்டில் தற்போது இருக்கின்றனர். 2030-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்கின்சன்ஸ் நோயால் அவதியுறுகின்ற நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஜெர்மனைச் சேர்ந்த மருத்துவப் பெரு நிறுவனமான எவர் பார்மாவால் தயாரிக்கப்படும் நவீன D-மைன் அபோமார்ஃபின் பம்ப்புகள், பேனாக்கள் (ஊசி மருந்துகள்) ஆகிய தயாரிப்புகள் செலிரா நியூரோசயின்சஸ் நிறுவனத்தால் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டன.

கிலேரா நியூரோ சயின்சஸ் – ன் மருத்துவ இயக்குனர் டாக்டர் பாபு நாராயணன் பேசுகையில், நோயின் ஆரம்ப நிலைகளுக்கு வாய் வழியாக உட்கொள்ளும் மாத்திரைகள் அல்லது நோய் முற்றிய நிலைகளுக்கு மூளையில் ஆழமான தூண்டல் அறுவைசிகிச்சை (DBS) ) தேவை. ஆனால் இந்த அறுவைசிகிச்சைக்கு செலவு அதிகமாகும்.
70 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை. இதுவரை நிலவிய இந்த இடை வெளியை D-மைன் பம்ப்புகள் மற்றும் ஊசிமருந்து பேனாக்கள் நிரப்புகின்றன என்றார்.

லண்டனின் கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையில் நகர்வுத்திறன் கோளாறுகள் மற்றும் பார்கின்சன் நோய்க்கான உயர்சிகிச்சை மையத்தின் இயக்குனர் டாக்டர் வினோத் மேட்டா பேசும் போது, லெவோடோப்பா என அழைக்கப்படும் மருந்து எதிர்பார்ப் பின்படி உகந்தவாறு செயல்படாத காலஅளவுகளின்போது அபோமார் ஃபின் சிகிச்சைமுறை நிவாரணம் அளிக்கிறது.

இம்மருந்து செயல்படாத தன் விளைவாக உடல்நடுக்கம், விரைப்புத்தன்மை மற்றும் சஞ்சல உணர்வு போன்ற அறிகுறிகள் நோயாளிகளுக்கு ஏற்படத் தொடங்குகின்றன. நோயாளிகளுக்கு தினசரி 50% இப்பாதிப்பு அறிகுறிகள் இல்லாத (off time) நேரம் இருப்பதை பல ஆய்வுகள் காட்டுகின்றன. தொடர்ச்சியான உட்செலுத்தலை மேற்கொள்ளும் பம்ப்பின் வழியாக அபோமார்ஃபின் தெரபி வழங்கப்படுவது, லெவோடோப்பா தேவையைக் குறைக்கிறது மற்றும் வாய் வழியாக உட்கொள்ளும் மருந்தின் தேவையை நீக்கி விடுகிறது அல்லது கணிசமான அளவு குறைக்கிறது.

அபோமார்ஃபின் தெரபி பெறும் நோயாளிகளிடம் மோட்டார் (உந்துவ) திறன்களில் காணப்படும் ஏற்ற இறக்கங்களும் மறைந்து விடுகின்றன என்றார்.
சென்னை, வெஸ்ட்மினிஸ்டர் ஹாஸ்பிட்டல்ஸ் தலைவர் டாக்டர் அருண் குழந்தைவேலு கூறியதாவது:

ஐரோப்பாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் உலகத் தரத்திலான அபோமார்ஃபின் தெரபியை சென்னையிலுள்ள நோயாளிகளுக்கு ஞி-மைன் பம்ப்புகள் மற்றும் ஊசிமருந்து பேனாக்கள் வழியாக வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img