fbpx
Homeபிற செய்திகள்கோவை -பெதஸ்தா பிரார்த்தனை மையத்தில் இயேசு அழைக்கிறார் சிறப்பு ஆசிர்வாத கூட்டம் ஸ்டெல்லா தினகரன், சாமுவேல்...

கோவை -பெதஸ்தா பிரார்த்தனை மையத்தில் இயேசு அழைக்கிறார் சிறப்பு ஆசிர்வாத கூட்டம் ஸ்டெல்லா தினகரன், சாமுவேல் பால் தினகரன் நற்செய்தி

கோவையிலிருந்து சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள காருண்யா நகரில் பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையம் இயங்கி வருகின்றது. இதன் எதிரில் உள்ள டி.ஜி.எஸ் தினகரன் கலையரங்கில் சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம் வரும் மார்ச் 20ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1:30 மணிக்கு நடைபெறுகிறது.

இயேசு அழைக்கிறார் நிறுவ னரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக டிரஸ்டியுமான டாக்டர் ஸ்டெல்லா தினகரன் கலந்துக் கொண்டு அருளுரை வழங்கி, சிறப்பு பிரார்த்தனை செய்கிறார். சாமுவேல் பால்தினகரன் மற்றும் டாக்டர் ஷில்பா சாமுவேல் ஆகியோர் கலந்துக் கொண்டு இந்த ஆண்டு அரசுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கி, பிரார்த்தனை செய்கிறார்.

வாழ்வின் விஷேசித்த தேவைகளுக்காக சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகளும் ஏறெடுக்கப்படும். காருண்யா மாணவ மாணவிகளின் சிறப்பு பாடல்களும் இடம்பெறும். இக்கூட்டத்தில் ஜாதி, மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கிறார்கள்.

இக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு வசதியாக பிரஸ்காலனி பஸ் நிறுத்தம், மேட்டுப்பாளையம் – சிவரஞ்சனி தியேட்டர், மதுக்கரை மரப்பாலம், ஒண்டிப்புதூர் -ஜோசப் பள்ளி, துடியலூர் – பஸ் நிறுத்தம், சித்ரா – பஸ் நிறுத்தம், சரவணம்பட்டி கஸ்தூரி சூப்பர் மார்க்கெட், கிணத்துக்கடவு டிஇஎல்சி ஆலயம் அருகில், கணபதி ஜெபகோபுரம், சிங்காநல்லூர், கோவைபுதூர், போத்தனூர், பல்லடம் – பஸ் நிறுத்தம் மற்றும் பொங்கலூர் – பெதப்பம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மதியம் 12 மணிக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மற்றும் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திலிருந்து காருண்யா நகர் செல்வதற்கும், கூட்ட முடிவில் திரும்பி செல்வதற்கும் அரசு பேருந்து வசதிகள் அதிகாலையிலிருந்து இரவு வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிற்றுண்டி சாலைகள், புத்தக சாலைகள் ஆகிய வசதிகள் கூட்ட அரங்கிற்குள் இடம் பெறும்.
காருண்யா மாணவர் சேர்க்கை பற்றி அறிய ஸ்டால்களும் உண்டு.

படிக்க வேண்டும்

spot_img