fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச மத நல்லிணக்க வாரம்: மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

சர்வதேச மத நல்லிணக்க வாரம்: மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

சர்வதேச மத நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு தூத் துக்குடி, திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு இடை யேயான கட்டுரைப் போட்டி மதர் பைவ்ரோஸ் தொண்டு நிறுவனம் சார்பாக நடந்தது.

அதன் பரிசளிப்பு விழா, பிஸியோதெரபிஸ்ட் முகம்மது நஸீர் தலைமையில் நடந்தது. திருநெல்வேலி பார்வையற்ற பள்ளி மாணவி அஸ்காரா பக்மி முதல் பரிசை வென்றார்.

திருநெல்வேலி செயின்ட் ஜோ சப் பள்ளி மாணவி ஜெனி, காயல்பட்டினம் முகைதின் பள்ளி முகம்மது தஸ்தகீர் ஆகியோர் முறையே 2, 3-வது பரிசுகளை பெற்றனர். இவர் களுடன் சிறப்புப் பரிசாக 12 பேருக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு, கோப்பை வழங்கப்பட்டன.

சிறப்பு அழைப்பாளர்களாக மீளவிட்டான் நூலகர் அஜீதா நாச்சியார், அருட்தந்தை ஜெயகர், சமூக சிந்தனையாளர் சத்தியமூர்த்தி, சமூக சேவகர் கணேசமூர்த்தி, முகம்மது சுல்தான் முகைதீன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

சிறப்பாசிரியர் ரிகானா பர்வின் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மதர்பைவ் ரோஸ் அறக்கட்டளை செயலாளர் ஆர்கிடெக்ட் முகம்மது ஹ யாஸ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img