fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கோதுமை மாவு, ரவை விற்பனை

கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கோதுமை மாவு, ரவை விற்பனை

கோபி சரகத்திற் குட்பட்ட ராஜன் நகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங் கத்தில் பல்சேவை மைய திட்டத்தின் மூலம் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் மங்களம் என்ற பெயரில் கோதுமை மாவு, ரவை பேக்கிங் செய்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் முதல் விற் பனையை கூட்டு றவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் க.ராஜ்குமார், ஈரோடு மண்டலம், ஈரோடு மாவட்ட மத் திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு.செந்தமிழ் செல்வி திட்டத்தினை துவக்கி வைத்தனர்.

கோபி சரக துணைப் பதிவாளர் ப.கந்த ராஜா, ஈரோடு சரக துணைப்பதிவாளர் கு.நர்மதா, நபார்டு டிடி எம் அசோக்குமார், ஆத் மா திட்டத்தலைவர் செல்வராஜ், வடக்கு ஒன்றிய அமைப்பாளர் ஆர்.கே.குணசேகரன், சத்தியமங்கலம் ஒன்றியக் குழு துணைத்தலைவர் சுப்புலட்சுமி, சங்கத் தலைவர் எம்.செந்தில் ரா ஜன் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், கூட் டுறவு நிர்வாகிகள், சங்கச் செயலாளர்கள், பணி யாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் பெரியகொடிவேரி தொ டக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் காசிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வியாபார நோக்கத்திற்காக ரூ.14.52 லட்சம் மதிப் பீட்டில் இரண்டு டாடா ஏசி வாகனங் களையும் அவற்றுக்கான சாவிகளை யும் வழங்கி துவக்கி வைத் தனர்.

படிக்க வேண்டும்

spot_img