கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் நஞ்சப்பா சாலையிலுள்ள நகர்நல மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.