fbpx
Homeபிற செய்திகள்குறுங்கோள் கண்டறிந்த கோவை மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

குறுங்கோள் கண்டறிந்த கோவை மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

குறுங்கோள் கண்டறியும் முகா மில் சிறப்பாக செயல்பட்ட, கோவை மாணவியர் இருவரை மாவட்ட கலெக்டர் சமீரன் பாராட்டினார்.

கோவை ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பிரமீஷா, சுவேதா ஆகிய இரு மாணவிகளும் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 22 வரை நடந்த குறுங்கோள் கண்டறியும் முகாமில் பங்கேற்றனர்.

அறிவியல் பலகை, திருச்சி ஆஸ்ட்ரோ கிளப், தமிழ்நாடு ஆஸ்ட் ரோநாமிக்கல் சயின்ஸ் சொசைட்டி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த முகாம் நடந்தது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் ‘நாசா’ மூலம் வழங்கப்பட்ட செயலி மூலம் 21 குறுங்கோள்களை இந்த மாணவியரின் குழு கண்டறிந்தது. இதை நாசா அமைப்பும் அங்கீகரித்துள்ளது.

மாணவியர் இருவரது பங்க ளிப்பை பாராட்டும் வகையில், விஞ்ஞான் பிரசார் மூலம் நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மாணவியர் இருவரும், நேற்று மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்தனர்.

அவர்களை கலெக்டர் பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், கோவை ஆஸ்ட் ரோ கிளப் செயலாளர் சாய்லட்சுமி, ஆசிரியர்கள் மங்கையர்க்கரசி, நாக ராஜ், கீதா ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img