fbpx
Homeபிற செய்திகள்சிவா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

சிவா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

சிவா அறக்கட்டளையின் 28வது ஆண்டு விழா. அதையொட்டி ஒரு சிறிய விழா கோவை சிவா அறக்கட் டளை அலுவலகத்தில் நடைபெற்றது.

பெங்களூர் த்வனி பௌண்டேஷனை சேர்ந்த அரவிந்த், கிருஷ்ண குமார் மற்றும் ரப்பி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து மாலையில் மேட்டுப்பாளையம் காட்டூரில் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பெங்களூர் STDHF உதவியுடன் பெற்ற 3 வீல்சேர்கள், 1 மூன்று சக்கர மிதிவண்டி மற்றும் கை ஊன்று கோல் ஆகியவை வழங்கப்பட்டன.

இவ்விழாவில் மேட்டுப் பாளையம் ரோட்டரி கிளப் தலைவர் டாக்டர் அரவிந்த் கார்த்திகேயன், சிவா அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா, சமூக ஆர்வலர் கவிதா மற்றும் சிவா அறக்கட்டளை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img