fbpx
Homeபிற செய்திகள்சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.41.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணி- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி...

சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.41.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணி- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி நேற்று (அக்.6) ஆய்வு செய்தார்.

சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் கட்டுமானப் பணிகள் மற்றும் வட்டார நாற்றுப்பண்ணை, ஊராட்சிகளில் நடவு செய்ய பல்வகை செடிகள் உற்பத்தி செய்யும் பணிகள், அங்கன்வாடி மையம், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடைபெறும் கிடைமட்ட உறிஞ்சு குழி, மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை தரம் பிரிக்கும் பணிகள், மண்புழு உரம் தயாரிக்கும் பணிகள் மற்றும் முருங்கை நாற்றங்கால் உற்பத்தி செய்யும் பணிகள் என மொத்தம் ரூ.41 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பணிகள் நடந்து வருகின்றன.

இவற்றை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.
சூளகிரி ஊராட்சி ஒன்றியம், இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சி, பெரியபேடப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட் டம் 2020-21 நிதியாண்டில் 2.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றுப்பண்ணையில் முருங்கை, ஜம்புநாவல், புளியன், புங்கன், சில்வர், தேக்கு, கொய்யா, நொச்சி, வேம்பு மரச்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. உற்பத்தி செய்யும் விதம் குறித்து பணியாளர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் சாலை ஓரத்தில் 200 மரக்கன்றுகள் நடும் பணி நடக்கின்றன.

சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இம்மிடிநாயக்கனப்பள்ளியில் ரூ.6 இலட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையல் கூட கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறி வுறுத்தினார்.
சென்னப்பள்ளி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் கிடைமட்ட உறிஞ்சுகுழி அமைக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை காவலர்கள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி, தரம் பிரிக்கும் பணி, சேமிப்பு கிடங்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் பணி, வட்டார அளவிலான நாற்றங்கால் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

சென்னம்பள்ளி ஊராட்சி, கரகனப்பள்ளியில் ரூ.12 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை தரமா கவும், விரைவாகவும் கட்டி முடிக்க அறிவுறுத்தினார்.

முன்னதாக, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், நிதிச் செலவினங்கள் குறித்தும் கேட்டறிந்து கோப்புகளை ஆய்வு செய்தார்.

சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட துவக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், கோபாலகிருஷ்ணன், ஒன்றிய பொறியாளர்கள் சுமதி, சியாமளா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டென்சிங், உமாசங்கர், பணி மேற்பார்வையாளர்கள் ராணி, சிற்றரசு, நஞ்சாரெட்டி மற்றும் ஊராட்சி செயலாளர்கள், ஊரக வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img