fbpx
Homeபிற செய்திகள்‘பயோ மைனிங்’ செய்தால் மட்டுமே கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு சுகாதார பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்...

‘பயோ மைனிங்’ செய்தால் மட்டுமே கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு சுகாதார பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் கோவையில் நீதிபதி ஜோதிமணி தகவல்

‘பயோ மைனிங்’ செய்வது மட்டுமே வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்சனைக்கு சரியான தீர்வு. கோவையில் அதிகாரிகள் ஒத்துழைப்பு இருந்தால், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்சனைக்கு விரைவில், தீர்வு காண முடியும் என்றார் நீதிபதி ஜோதிமணி.

கோவையில் திடக்கழிவு மேலாண்மைக்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மாநிலக் கண் காணிப்புக் குழுவின் தலைவரும், நீதிபதியுமான ஜோதிமணி, நேற்று முன் தினம் (அக்.6) வெள்ளலூர் குப்பைக் கிடங்கை ஆய்வு செய்தார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள மக்களிடம், குப்பைக் கிடங்கால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில், நேற்று (அக்.7) அவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

நிறைய துன்பங்கள்
ஆலோசனைக்குப் பின்னர் நீதிபதி ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:
வெள்ளலூர் குப்பைக் கிடங்கு செயல்பாடுகள் விதிமுறைகளின்படி செயல்படுகிறதா என ஆய்வு செய்தோம். குப்பைக் கிடங்கு மற்றும் அதனை சுற்றி இருக்கும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

குப்பைக் கிடங்கால் பொது மக்கள் நிறைய கஷ்டங்களுக்கு உள்ளாகின்றனர்.
20 ஆண்டுளுக்கும் மேலாக குப்பை கொட்டப்பட்டு வருவதால், பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

குப்பைக் கிடங்கை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, அதை சரியாக செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

15 மாத காலக்கெடு
நேற்று (அக்.7) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பொது மக்கள் கலந்து கொண்டனர். ஆட்சியர், ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்சனைக்கு அடுத்த 15 மாதங்களுக்குள் முழுமையாக தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. இந்த பணி 3 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும்.

கோவை மாநகராட்சியில் தற் போது உள்ள நுண் உர தயாரிப்பு மையங்களை முழுமையாக 4 வாரத்தில் செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைக் கிடங்கை முழுமையாக அகற்ற, நீதிமன்றம் வழங்கிய சட்டப்படியான காலம் முடிந்து விட்டது என்றாலும், பொதுமக்கள் நலன் கருதி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஞ்ஞான முறையில் தீர்வு
முதலில் குப்பையை எந்தெந்த இடங்களில் அகற்ற வேண்டும் என்பதையும், உடனடியாக சில தீர்வுகள் ஏற்படுத்தும் பணிகளையும் அறிவுறுத்தியுள்ளோம். விஞ்ஞான முறையில் இதற்கு தீர்வு காண வேண்டும்.

வெள்ளலூரில் நிலத்தடியில் இருக்கும் நச்சுத்தன்மை கொண்ட தண்ணீர் அகற்றப்பட வேண்டும். 15 மாதங்களில் முழுமையாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களும் இதை செய்து முடிப்பதாக தெரிவித்துள்ளனர்.
நுண்உர தயாரிப்பு மையங்களால் பிரச்சினை இருக்காது.
இதை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குப்பை லாரிகளில் இருந்து குப்பை சிதறாமல் போக வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கிறோம். பயோ மைனிங் செய்வது மட் டுமே வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்சனைக்கு சரியான தீர்வு.

குப்பைக் கிடங்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பகு தியில் நிலத்தடி நீர் 200 சதவீதம் டிடிஎஸ் அதிகமாக இருக்கிறது என மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

பாதிப்பு இல்லை
நுண்உர தயாரிப்பு மையம் என்ற நடைமுறை கும்பகோணத்தில் முதலில் கொண்டு வரப்பட்டது. இப்போது எல்லா பகுதிகளிலும் கொண்டு வரப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்புகள் கிடையாது.

கோவையில் அதிகாரிகள் ஒத்துழைப்பு இருந்தால், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முடியும். கோவை மாநகராட்சியில் மொத் தம் 69 நுண் உர தயாரிப்பு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தன. இவற்றில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 34 மையங்களில் 12 மட்டுமே செயல் பட்டு வருகிறது.

செயல்படாத நுண்உர மையங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், புதிய மையங்களை விரைவில் அமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img