fbpx
Homeபிற செய்திகள்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்- ராமநாதபுரம் ஆட்சியர் வலியுறுத்தல்

நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்- ராமநாதபுரம் ஆட்சியர் வலியுறுத்தல்

‘நீட்’ மட்டுமே நுழைவுத் தேர்வு அல்ல. பல்வேறு போட்டித் தேர்வுகள், நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பேசினார்.

ராமநாதபுரம் மாவட் டம், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளா கத்தில் பள்ளிக்கல்வித் துறை மூலம், மாதிரிப்பள்ளி யினை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

ஆட்சியர் பேசியதாவது:
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்யும் வகையிலும், மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

அரசின் இட ஒதுக் கீட்டுக் கொள்கையைப் பின்பற்றியும், மாணவர்க ளின் கல்வி, கலை மற்றும் விளையாட்டு போன்ற கூடுதல் பாடத் திட்டங் கள் உட்பட அவர்களின் ஒட்டுமொத்த செயல்தி றனை அடிப்படையாகக் கொண்டும் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது.

மாதிரிப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
நீங்கள் சார்ந்த பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தரும் பெரிய பொறுப்பு மாணவர்களாகிய உங்களுக்கு உள்ளது.

உங்களது வெற்றி சக மாணவர்களும், அடுத்து வரும் இளைய சமு தாயத்தினரும், உங்களை பின்பற்றி அவர்களையும் வெற்றியடைய செய்ய வேண்டும். நீங்கள் மட்டு மல்லாது, உங்களது குடும்பம் மற்றும் கிராம மக்களை மேம்படுத்த நன்றாக படித்து முன்னேற வேண்டும் .

ஏற்கனவே நமது மாவட்டத்தில் இதுபோன்ற பயிற்சி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. தற்போது 12-ம் வகுப்பு பயிலும் 80 மாணவர்களும், 11-ம் வகுப்பு பயிலும் 160 மாணவர்களும் இந்த மாதிரிப் பள்ளியில் பயிற்சி பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இப்பள்ளியில் பயிற்சி யில் ஈடுபடும் மாணவர்கள் 100% தாங்கள் எழுதிய தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெறும் வகையில் ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட திறமையினை ஒரு மாதத்திற்குள் கண்டு பிடித்து அவர்களின் இலக்கை எய்திட வழி காட்ட வேண்டும்.
‘நீட்’ மட்டுமே நுழைவுத் தேர்வு அல்ல. பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை தெரிந்து கொண்டு, அதற்கான பயிற் சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.

தமிழ், ஆங்கிலம் உள் ளிட்ட மொழிகளோடு பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து விதமான உட் கட்டமைப்பு வசதிகளும் மாதிரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே மாதிரிப் பள்ளியில் பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் அனை வரும் தாங்கள் எழுதிய போட்டி தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பேசினார்.

செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவி, பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாநில மாதிரிப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் நவநீதகிருஷ்ணன், தலைமையாசிரியர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img