கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, வணிகவியல் துறை மென் திறன் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஏ.சாந்தி வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் செ.பாலுசாமி தலைமை தாங்கி பேசினார்.வணிகவியல் துறை முதன்மையர் கே.குமுதாதேவி வாழ்த்துரை வழங்கினார்.
பொள்ளாச்சி, யூத் கார்ப் டிரைனிங் சொல்யூஷன்ஸ், மென் திறன்கள் மற்றும் உளவியல் பயிற்சியாளர் மணிகண்டன் சுந்தரேசன் சிறப்புரையில், மாணவர்களுக்கு பேசும் திறனை விதைப்பதும், மாணவர்களின் ஆளுமை மேம்படும் வகையில் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.
நேர்காணல் திறன்கள் மற்றும் நுட்பங்கள் குறித்தும் விளக்கினார். மாணவர்கள் கேட்ட வினாக்களுக்கு விடை கூறி ஐயம் நீக்கினார்.
வணிகவியல் துறைத் தலைவர் மற்றும் இணைப்பேராசிரியை முனைவர் ஏ.சாந்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். உதவிப் பேராசிரியை டி.ஏ. அர்ச்சனா நன்றி கூறினார்.