fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர். கலைக் கல்லூரியுடன் எல் அண்ட் டி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர். கலைக் கல்லூரியுடன் எல் அண்ட் டி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர்.கலை அறி வியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி சென்னை எல் அண்ட் டி எஜூ டெக் உடன் கணினி அறிவியல், வணிகப் பகுப்பாய்வு, தரவுப் பகுப்பாய்வுபோன்ற பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட, சான்றிதழ் படிப்புகளை வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இது மாணவர்களுக்கு தொழில் மற்றும் வாழ்க்கைக்கான வழிகாட்டு தலை வழங்க உதவும். கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பாலுசாமி, காலேஜ் கனெக்ட் பிசினஸ் எல்&டி எஜூ டெக் தலைவர் ஃபெபின், கல்லூரி செயலாளர் மற்றும் ஆலோசகர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஹேமா சந்திரசேகரன், சீனியர் மேலாளர், ப்ரீ சேல்ஸ் – பிசினஸ் டெவ லப்மெண்ட், எல் – டி எஜூ டெக், டாக்டர் குமுதா தேவி, வணிகவியல் புல முதன்மையர், டாக்டர் ஷர்மிளா, கணினி அறிவியல் துறை புல முதன்மையர், டாக்டர் சியாம் சுந்தர், மேலாண்மை துறை புல முதன்மையர், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடன் இருந்தனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தையும் மாணவர்களின் வாழ்க்கை மற்றும் தொழில் நலன்களுக்காக அவர்கள் வழங்கப்போகும் பயிற்சி பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img