fbpx
Homeபிற செய்திகள்ஜல்லிப்பட்டி ஊராட்சியில் அதிமுக பொன்விழா

ஜல்லிப்பட்டி ஊராட்சியில் அதிமுக பொன்விழா

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜல்லிப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ஜோதிராஜ் தலைமையில் கட்சியின் கொடியேற்றி திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் கூட்டுறவு சங்க தலைவர் ராமசாமி, மாவட்ட பிரதிநிதி ஜெ கதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கருமத்தம்பட்டியில் நகர செயலாளர் ஆதவன் பிரகாஷ் தலைமையில் அதிமுக பொன்விழா கொண்டாடினர்.

சூலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நகர செயலாளர் கார்த்திகை வேலன், ஏ.பி.அங்கணன், மீனவர் அணி ஆறுமுகம், சூலூர் மோகன், பவி சண்முகம், அருண், கரிகாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாப்பம்பட்டியில் எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.

செலக்கரைச்சல் கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ1 கருப்புசாமி, கள்ளப்பாளையம் கூட்டுறவு வங்கி தலைவர் பாலிடிக்ஸ் ரங்கநாதன், பாப்பம்பட்டி ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img