கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் தொடர்பான மண்டல அளவிலான ஆலோசனைக்கூட்டம் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்புச் செயலர் ஹர் சஹாய் மீனா தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன் (கோவை), கிருஷ்ணனுண்ணி (ஈரோடு), அம்ரித் (நீலகிரி), நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஆலோசகர் சுஜாதா, திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன் ஆகியோர் உள்ளனர்.