fbpx
Homeபிற செய்திகள்தீபாவளி முன்னிட்டு 22 வது வார்டில் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு, புத்தாடைகள் வழங்கல்

தீபாவளி முன்னிட்டு 22 வது வார்டில் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு, புத்தாடைகள் வழங்கல்

தீபாவளி திருநாளை முன்னிட்டு கோவை மாநகராட்சி 22 ஆவது வார்டு பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும்இனிப்புகள் வழங்கப்பட்டன.


திமுக மாவட்ட துணை பொறுப்பாளர் அசோக், 22-வது வட்ட செயலாளர் த. பிரபாகரன், 22 வது வார்டு திமுக கவுன்சிலர் கோவை பாபு,  உள்ளிட்டோர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நல உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.திமுக பொதுக்குழு உறுப்பினரும் 8 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான விஜயகுமார், பொது குழு உறுப்பினர் தேவராஜ், டி.ராம்குமார் வசந்தகுமார், லட்சுமணன் உட்பட கட்சி நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img