கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.88க்குட்பட்ட அபிராமபுரம் பகுதியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் துணைமேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் பாபு, செந்தில்குமார், அப்துல் காதர், வசந்தாமணி, உதவி ஆணையர் அண்ணாதுரை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.