fbpx
Homeபிற செய்திகள்மாணவிகளுக்கான எறிபந்து, கபடி போட்டிகள்

மாணவிகளுக்கான எறிபந்து, கபடி போட்டிகள்

கிருஷ்ணகிரி பாரத் சர்வதேச சீனியர் செகன்டரி பள்ளியில், 14, 17 மற்றும், 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான வருவாய் கோட்ட அளவிலான எறிபந்து மற்றும் கபடிப் போட்டிகள் நேற்று நடந்தது.

இப்போட்டியில், சரக அளவில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்ற மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை ஏற்று துவக்கி வைத்தார்.

பாரத் கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் மணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவி களுக்கு பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனத் தலைவர் மணி, கேடயம் வழங்கி பாராட்டினார்.

பள்ளியின் முதல்வர் ஹரிநாத் நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சத்தியநாதன், மாதேஸ், ரமேஷ்பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெறுகின்றனர். இதில், 64 மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img