fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழாவில் மாணவர் விருது

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழாவில் மாணவர் விருது

கோவை பச்சாபாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியில் நேற்று 22வது கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக் கட்டளையின் இணை நிர் வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் ஃப்ளோ லிங்க் சிஸ்டம்ஸ் லிமிடெட்டின் முன்னாள் நிர்வாக இயக் குனர் கோவிந்தராஜன், அண்ணாமலை கேபிடல் சர் வீசஸின் நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ஆகயோர் விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

மேலும், இருவரும் மாணவர்களின் சாதனை களைப் பாராட்டியதுடன், கல்வியில் சிறந்து விளங்கும் இந்நிறுவனம் வெற்றியடைய வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில், 2023-2024 ஆண்டிற்கான “சிறந்த மாணவர் விருது” பொதுப் பிரிவில், இறுதியாண்டு இயந்திர பொறியியல் துறை மாணவர் தனுஷ் பிரபாகரன், மாணவி பிரிவில் இறுதியாண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவி ஹேமா வர்ஷினிக்கும் வழங்கப் பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் மு.பால்ராஜ், 2023-2024க்கான ஆண்டு அறிக் கையை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img