fbpx
Homeதலையங்கம்35 நாட்களில் சிம்பொனி: இசை ஞானிக்கு வாழ்த்து!

35 நாட்களில் சிம்பொனி: இசை ஞானிக்கு வாழ்த்து!

இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பல்லாயிரம் வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ளார். அவரது இசை தற்போது வரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகவே அமைந்து வருகிறது.

தன்னுடைய பாடல்களுக்கு காப்பிரைட் கேட்பது உள்ளிட்ட சில சர்ச்சைகளில் அவர் சிக்கினாலும் அது குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் இளையராஜாவின் இசையை தொடர்ந்து ரசிகர்கள் போற்றி வருகின்றனர்.

இந்த வயதிலும் அவர் துடிப்பான இளைஞரை போல இசையமைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை, ஒரு புதிய அறிவிப்பை வெளியிடப் போவதாக இளையராஜா தெரிவித்திருந்தார். அது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களை நாள் கணக்கில் காக்க வைக்காமல் நேற்று மாலையே அதற்கான விடையை வீடியோ வெளியிட்டு கொடுத்துள்ளார், இளையராஜா.

தன்னை பற்றி வரும் விமர்சனங்கள் குறித்தெல்லாம் கவலை கொள்ள நேரமில்லாமல் தான் தொடர்ந்து செயல்பட்டு வருவதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள இளையராஜா, தான் 35 நாட்களில் சிம்பொனி இசையை வடிவமைத்துள்ளதைப் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக இதே போன்ற முயற்சியை அவர் மேற்கொண்ட சூழலில் தற்போது மீண்டும் அந்த முயற்சியை குறுகிய காலத்திலேயே அவர் செய்து அசத்தி இருக்கிறார்.

அவருடைய இந்த புதிய சிம்பொனி இசை வடிவமைப்பு சாதனைக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இசை ஞானிக்கு வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img