கோவை முன்னாள் மேயர் தா.மலரவனின் திருவுருவ படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சென்று இன்று மலரஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
உடன் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்எல்ஏ, கழக அமைப்புச் செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ, ஒன்றிய கழகச் செயலாளர் வி.பி.கந்தசாமி எம்எல்ஏ, கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.