fbpx
Homeபிற செய்திகள்தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் 33. தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நேற்று நடைபெற்றது. வாக்கும் எண்ணும் அலுவலர்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷீலா, தேர்தல் வட்டாட்சியர் செந்தில்குமார், பேரிடர் வட்டாட்சியர் பாலசண்முகம் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜூன் 4 அன்று தேனி பாராளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமான கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img