fbpx
Homeபிற செய்திகள்கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை தடுக்க கோரிக்கை

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை தடுக்க கோரிக்கை

நாளுக்கு நாள் உயரும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய அரசு தனி குழு அமைக்க வேண்டும் என கோவை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட அனைத்து வகை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று கோவை ப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ரமேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். இதனை தொடர்ந்து இச்சங்கத்தின் புதிய தலைவராக விஜயகுமார், துணைத் தலைவராக செவ்வேல், செயளாலராக ராஜரத்தினமும், மற்றும் பொருளாளராக மணிகண்டன் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொது பணித்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம், மற்றும் பொறியாளர் வெங்கடசுப்ரமணி ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.

இதனை தொடர்த்து செய்தியாளர்களிடம் பேசிய இச்சங்கத்தின் பதிய தலைவராக பதவியேற்ற விஜயகுமார் கூறுகையில், காட்சியா என்ற இந்த அமைப்பின் மூன்றாம் ஆண்டு பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது, இத்துறையில் உள்ள பல்வேறு இடையூறுகள் மற்றும் பொறியாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை களைய வேண்டும் என துவங்கபட்ட இச்சங்கம் மூன்று ஆண்டுகளாக பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து உள்ளதாகவும், மேலும் வருகின்ற நவம்பர் மாதம் 22,23,24 ஆகிய மூன்று தேதிகளில் கட்டுமான கண்காட்சியை கொடிசியா வளாகத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், கடந்த காலங்களில் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, செங்கல், மனல், உள்ளிட்ட அனைத்து பொருட்கள் நாளுக்குநாள் உயரும் விலை உயர்வை கன்டித்து பல்வேறு போராட்டம், மற்றும் ஆர்பாட்டங்களை நடத்தி, தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு எடுத்து சென்று மனுவாக அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அந்த மனுவில் எங்களது சங்கத்தின் கோரிக்கையாக கட்டுமான மூல பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்வதை தடுக்க வேண்டும், ஒரு நிலையான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் அதற்கு ஒரு குழு அமைத்து இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதற்க்கு அரசிடம் இருந்து நல்ல பதிலும் கிடைக்க பெற்றுள்ளது என்றார்.
கட்டுமான பணிகளுக்கு தேவையான உரிமங்களை, பெற மாநகராட்சி நிர்வாகம் தற்பொழுது அதிக அளவில் காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது, இந்த உரிமங்களை மாநகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் ஆய்வு செய்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக கூறினார்.

இந்த நிகழ்வில் இச்சங்கத்தின் துணை செயலாளர் பிரேம்குமார் பாபு, துணை பொருளாளர் ரவி, மற்றும் அலுவலக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் திருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img