fbpx
Homeபிற செய்திகள்மாணவனுக்கு நிதி உதவி வழங்கிய நா.கார்த்திக்

மாணவனுக்கு நிதி உதவி வழங்கிய நா.கார்த்திக்

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற கோவையை சேர்ந்த மாணவருக்கு கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கல்வி நிதி உத வியை வழங்கினார். கோவை மாநகர், மாவட்ட தி.மு.க., சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங் கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிங்காநல்லூரை சேர்ந்த மாணிக்கம்-மகேஸ்வரி தம்பதியினரின் மகன் முகுந்தன் நடை பெற்று முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

அவருக்கு முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளருமான நா.கார்த்திக் கல்லூரி படிப்பிற்கான கல்வி நிதி உதவியை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது தி.மு.க.,வின் சிங்காநல்லூர் பகுதி துணைச்செயலாளர் திராவிட மணி, பகுதி அவைத்தலைவர் கே.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img