fbpx
Homeபிற செய்திகள்கோவில் விழாவில் நடனமாடிய எஸ்.பி.வேலுமணி

கோவில் விழாவில் நடனமாடிய எஸ்.பி.வேலுமணி

கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று ஸ்ரீ சக்தி கரகம், மற்றும் தேர் பவனி நடை பெற்றது.

இந்த விழாவில முன் னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு ஸ்ரீ சக்தி மாரியம்மன் தேர் பவனியை துவக்கி வைத்து, பக்தர்களுடன் உற்சாக நடனமாடி ஊர்வலமாக நடந்துசென்றார்.

திருத்தேரானது, பி.கே.புதூர், கோவைபுதூர் பிரிவு, உட்பட பாலக்காடு பிர தான சாலைவழியாக ஊர் வலமாக சென்றது.

விழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், முளைப்பாரிகள் எடுத்தும், பூ சட்டிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செய்தனர். மேலும் இளைஞர்களின் சிலம்பாட்டம், வான வேடிக்கை என்று திரு விழா களைகட்டி உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img